search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண விழா"

    • டாக்டர் சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரையில் உள்ள சரவணா மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பா.சரவணன்-கனிெமாழி தம்பதியரின் மகன் டாக்டர் அம்ரித் குமாருக்கும், தனசேகரன்-விஜயலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் சாதுர்யா என்கிற அபூர்வஸ்ரீக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அவர்களது திருமணம் மதுரை ரிங் ரோட்டில் உள்ள வேலம்மாள் மருத்து வக்கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை (14-ந்தேதி) காலை 9.15 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடக்கிறது.இவர்களது திருமணத்தை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடத்தி வைக்கிறார்.

    இந்த திருமண விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர்.

    திருமண விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படு கிறது. மேலும் ஏழை-எளிய குடும்பத்தை சேர்ந்த 50 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்ட பத்திரம் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

    மணமக்கள் டாக்டர் அம்ரித்குமார்-டாக்டர் சாதுர்யா ஆகியோரின் திருமண வரவேற்பு மதுரை ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. திருமணம் மற்றும் வரவேற்பு விழாவில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

    • திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்- லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பொங்கலூர் அருகே உள்ள சாந்தி திருமண மகாலில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். பின்னர் மணமக்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடாஎஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், விஜயகுமார் எம்.எல்.ஏ., பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் அ.நடராஜன், பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் நீதிராஜன், வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பழனிவேல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தனியரசு உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் , தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வின்னர் இல்ல திருமண விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை சஞ்சீவி பிரியா, தொழிலதிபர் சஞ்சீவி ராஜன், பொறியாளர் சஞ்சீவி ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்- தமிழரசி தம்பதியரின் மகள் சுயம்பு கனிக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரிப்பையூர் ஊராட்சி அம்மன்புரம் முருகன் -லதா தம்பதியரின் மகன் பொறியாளர் அர்ஜூனுக்கும் கன்னிராஜபுரம் இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.

    நாராயணன்- மகாலட்சுமி, அழகு லிங்கம் -கலைச்செல்வி, நடராஜன்- வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கராசு உறவினர்கள் கீழக்கரை மகாலட்சுமி, நளினராஜா, பாதேசுவரி, பிரேமதி தமிழரசி, ராஜாங்கம், சத்தியபிரியா, செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நித்யா, சரவணன், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலிங்கம், ஆதிபராசக்தி, புஷ்பரதி, சுரேஷ், நடராஜன், தினேஷ் லிங்கம், வான்மதி, பிரம்ம லிங்கம், காயத்ரி.

    செவல்பட்டியைச் சேர்ந்த அருணா தேவி, ராஜவேல், சாயல்குடி வி.வி.ஆர். நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி, சிவஞான குருநாதன், கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரி, பால சிந்தாமணி, மதுரையைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை, ராஜாங்கம், ஜெயராமன், விஜி பாரதி, வேல்முருகன், ஜெயராணி, காளிராஜன், மாரி, சண்முகம்.

    பொன்னகரம் கிராமத்தைச் சேர்ந்த சரசுவதி முருகேசன், பாலசுப்பிரமணியன், அனிதா, கன்னிராஜ புரத்தைச் சேர்ந்த பாலசுந்தரி, ராஜீவ் காந்தி, சாயல்குடி வி.வி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜ பெருமாள், புஷ்பவள்ளி தனசேகரராஜா, செல்லின், பார்த்திபராஜா, வின்னரசி, குலசேகர ராஜா.

    கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், வைதேகி உள்ளிடட உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சஞ்சீவி பிரியா, தொழிலதிபர் சஞ்சீவி ராஜன், பொறியாளர் சஞ்சீவி ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மணமக்களை டி.டி.வி. தினகரன் வாழ்த்தி பேசினார்
    • பெருமாள் கோவில் அருகே டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

    திருப்பூர், 

    அ.ம.மு.க.பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி தலைவருமான மலையாண்டவர் ஏ.ஆர்.நடராஜ்-நிர்மலா தம்பதியின் மகன் லோகேஷ் மற்றும் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்கிற மாரிமுத்து-ஈஸ்வரி தம்பதியின் மகள் வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று இரவு திருப்பூர் ராமசாமி கவுண்டர்முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் உடுமலை சி.சண்முகவேலு, அமைப்பு செயலாளர் சேலஞ்சர் துரை ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர் பேசினார். விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் கே.கிங், மாநகர் மாவட்ட துணை செயலாளர் சூர்யா செந்தில் மற்றும் அ.ம.மு.க. திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் அ.ம.மு.க. பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மலையாண்டவர் நடராஜ் நன்றி கூறினார்.

    முன்னதாக திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் பெருமாள் கோவில் முன்பும், வடக்கு மாவட்டத்தின் சார்பில் சந்தைப்பேட்டையிலும் அ.ம.மு.க. பொதுச்செயலளார் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருப்பூர் பெருமாள் கோவில் அருகே திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் விசாலாட்சி தலைமையில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் புல்லட் ரவி, சூர்யா செந்தில் , மாநகர் மாவட்ட பொருளாளர் சேகர் என்ற ஜெகநாதன், மாநகர் மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ரத்தினசாமி, மாநகர் மாவட்ட அம்மா இளைஞரணி செயலாளர் பெஸ்ட் தம்பு என்ற சண்முகசுந்தரம், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முத்துக்குட்டி, பொதுக்குழு உறுப்பினர் குட்வின் பழனிசாமி, அம்மா பனியன் தொழிற்சங்கம் சுரேஷ்ராஜா, மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பச்சமுத்து உள்பட அ.ம.மு.க. பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×